Nadigar
Thilagam Film appreciation and nostalgics Society.
NTFans
- நடிகர் திலகத்தின்
திரைப்படத் திறனாய்வு மற்றும் நினைவாழ்தல் இயக்கம்
- விவரங்களுக்கு இங்கே
சொடுக்கவும்.
நடிகர்
திலகத்தின் புகழ் பரப்பிப் பெருமை பெற்று வெளிவந்த
பருவ இதழ்களில் சில-
சிவாஜி
ரசிகன் -
அகில
இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்
சார்பில் வெளிவந்தது - ஆசிரியர்
- சின்ன அண்ணாமலை
சினிமா
ஸ்டார் -
ஆசிரியர்
- ராஜன்
திரைவானம்
மதி
ஒளி -
ஆசிரியர்
மதி ஒளி சண்முகம்
மின்னல்
கொடி
எங்கள்
சிவாஜி -
ஆசிரியர்
எஸ். விஜயன்
வசந்த
மாளிகை -
ஆசிரியர்
பம்மல் சுவாமிநாதன்
நமது
சிவாஜி -
ஆசிரியர்
ஜவஹர்
சிவாஜி
முரசு -
ஆசிரியர்
நவாஸ்
For
the kind attention of Tamil Film Producers/
Diectors:
Registered Scripts/ Stories available. Contact:
9444225294
தயாரிப்பாளர்
மற்றும் இயக்குநர்களின் பார்வைக்கு -- முறைப்படி பதிவு
செய்யப்பட்ட கதை, திரைக்கதைகள் உள்ளன. கைப்பேசியில்
தொடர்பு கொள்ளவும்.எண் 9444225294
நடிப்புக்
கலையில் சிவாஜி ஒரு சமுத்திரம். உலகம் முழுவதும்
இன்று வரை வந்துள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரே
நடிப்பில் சமுத்திரம்! இந்தச் சமுத்திரத்தின்
முன் பிற நடிகர்கள் எல்லோருமே சாதாரண நதிகள்
தான்! ஆலிவுட் நடிகர்களுமே அப்படித்தான்.
மார்கழித்
திங்கள் மதி நிறைந்த நன்னாள், திருமாலை நினைந்துக்
கோலமிடும் இந்நாள், திருமால் பெருமையினைப் போற்றிடும்
நாளெல்லாம் நடிகர் திலகம் நினைவும் உடன் சேரும். பச்சை
மாமலை போல் மேனி என்று சௌந்தரராஜன் பக்திப் பரவசத்துடன்
குரல் கொடுக்க கண்முன்னே திருமாலை வரவழைக்கும் பக்தியுடன்
ஊனுருகி வேண்டி நிற்கும் நடிகர் திலகத்தைப் பாராத
கண்ணும் ஒரு கண்ணா... படம் - திருமால் பெருமை, இசை
K.V. மகாதேவன்
இப்
பாடல் காட்சியைப் பதிவேற்றம் செய்த சம்பந்தப்பட்ட
இணையதளங்களுக்கு
நன்றி.
லூயி
மல்லெ என்ற பிரபல பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் நமது பாரத
நாட்டினைப் பற்றி எடுத்துள்ள ஒரு செய்திப் படத்தில் இடம்
பெறும் தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பினை காண
இங்கே
க்ளிக் செய்யவும். நன்றி, திரு. மோகன்ராமன் மற்றும்
யூட்யூப் இணையதளம்.
Our
sincere thanks to Shri Mohan V. Raman and Youtube for
this clipping
வாழ்க
நாடு என்று துவங்கும் நடிகர் திலகத்தின்
முகவுரையைக் கேட்க இங்கே
சொடுக்கவும். ... ListenNadigar
Thilagam's welcome signature address...
"...என்னுடைய
வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அனைத்து மக்கள் மனதிலும்
நிரந்தரமாக, ஒரு 'நடிகனாக' இருப்பவன் நான். எல்லோருக்கும்
என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் சிறு வயது
முதற்கொண்டே நடிக்க ஆரம்பித்தேன். சினிமா உலகத்தில்
நான் நடிக்க ஆரம்பித்த பிறகு, என்னைப் பற்றிய குறிப்புகள்
பல, புத்தகங்கள் வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும்,
சிறப்பு மலர்கள் மூலமாகவும், செய்திகளாகவும், விமர்சனங்களாகவும்,
பல்வேறு காலக் கட்டங்களில் வெளிவந்திருக்கின்றன.
அவற்றில் சிலவற்றில் என்னைப் பற்றி உயர்த்தி சொல்லப்
பட்டிருக்கலாம். சிலவற்றில் குறைத்துச் சொல்லப்
பட்டிருக்கலாம். ஒரு சிலவற்றில் நிறைவானதாகக் குறிப்பிடப்
பட்டிருக்கலாம்.
வேறு சிலவற்றில் சொல்லப் பட்டவை பொருத்தமற்றதாகக்கூட
இருக்கலாம். ஏன், ஒரு சில செய்திகள், உண்மைக்குப்
புறம்பானதாகக்கூட இருக்கலாம். இவற்றிற்கெல்லாம்
அந்தக் காலத்தில், அந்த சமயத்தில், பதில் சொல்ல,
எனக்கு நேரமும் காலமும் கிடையாது. அதற்கெல்லாம்
தற்பொழுது பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் எனக்கு
இல்லை. இருந்தாலும், எனது வாழ்க்கையின் உண்மைச்
சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன். அதன் மூலம், சரியான
விஷயத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்."
-
எனது சுயசரிதை நூலில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி
கணேசன் அவர்கள்.
(முன்னுரை, பக்கம் 1).
தொகுப்பாசிரியர்
- டாக்டர் T.S. நாராயணஸ்வாமி
பதிப்பாளர்கள்
- சிவாஜி பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட், 23, பெஸன்ட் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை-600014. தொலைபேசி எண் 91
44 23850126
இந்நூலைப்
பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றிய மற்ற இதர நூல்களைப்
பற்றியும் விவரமறிய
இங்கே சொடுக்குக
நடிகர்
திலகத்துடன் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே
என்று வருந்துகிறேன் -
-
நானா படேகர்
I
regret not having had the opportunity to work
with greats like K Vishwanath, K Balachander
and Sivaji
Ganesan.
This
Day That Age(Films released this month will
be listed in this page)
அந்நாளில் இந்நாள் - இம்மாதத்தில் வெளிவந்த நடிகர்
திலகத்தின் படங்களின் பட்டியல்
தமிழரின்
பெருமையை உலகெங்கும் பறை சாற்றி உலகின் தலை சிறந்த நடிகனாகத்
திகழும் நடிகர் திலகம் அவர்களின் திரையுலக சாதனைகள் அளவற்றவை.
ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் இன்னொருவரை உயர்த்தி எழுதும்
ஒரு தொடரில் மறைமுகமாக நடிகர் திலகத்தின் சாதனைகளை இருட்டடிப்பு
செய்யும் வகையில் ஒரு கட்டுரை வெளி வருகிறது. அவர்கள் யாரையும்
உயர்த்தி எழுதட்டும். அது அவர்கள் உரிமை. ஆனால் தமிழரான
நடிகர்திலகத்தை இருட்டடிப்பு செய்வது, உங்களை நீங்களே இழிவு
செய்வதற்கொப்பாகும். இதே நடிகர் திலகம் தமிழகத்தைத் தவிர
வேறொரு மாநிலத்தில் பிறந்திருந்தால் அவரது சிறப்பினைத் தகுந்த
முறையில் கௌரவித்திருப்பார்கள். தமிழுணர்வு பற்றி வாய் கிழியப்
பேசும் யாரும் நடிகர் திலகத்தினை இருட்டடிப்பு செய்யும்
போக்கினைக் கண்டு கொள்ளாதது விந்தையாக உள்ளது. இது என்ன
தமிழுணர்வு என்று தெரியவில்லை. அனைவருக்கும் ஒரு பணிவான
வேண்டுகோள். தயவு செய்து இனிமேலும் நடிகர் திலகத்தைப் பற்றி
இருட்டடிப்பு செய்தும் மறைமுகமாக அவரது சாதனைகளை மூடி மறைத்தும்
எழுதும் போக்கினைக் கைவிடுங்கள்.
சிவாஜி
இலக்கணம் என்பது
ஒரு நடிகன் தான் ஏற்ற பாத்திரத்தின்
தன்மை, அதன் குணங்கள், உணர்வுகள், ஆகியவற்றை உள்ளுக்குள்
வாங்கி உண்மை வாழ்க்கையைப் படம் பிடிக்காமல் உண்மைக்கும்
பொய்க்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் நின்று, கலாபூர்வமான
படைப்பை வழங்க வேண்டுமென்பது ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின்
முறை மட்டுமல்ல, சிவாஜியின் இலக்கண முறையும் அதுதான்.
இரண்டிற்குமுள்ள ஒரேயொரு வேறுபாடு தன்னுடைய பயிற்சி
முறையை நடிகனான ஸ்தானிஸ்லாவ்ஸ்கி கறுப்பு-வெள்ளையில்
எழுத்தாக்கினார். சிவாஜி கணேசன் அவர்கள் 'செலுலாய்டு'
என்ற திரைப்படச் சுருளில் ஒரு முறையாக நிற்கிறார்.
ஆனால் சிவாஜி கணேசன் நாடக நடிகன் என்பது அவரது வலுவான
அடிப்படையாக இருந்தாலும் திரைப்பட நடிகர் என்ற நிலையில்
முதலாவதாக நிற்கிறார்.
நடிகன் தன் உடல், குரல், நடை,
உடை, பாவனை, உணர்ச்சிகளை வெளியிடுவது, அங்க அசைவுகள்
இவற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதைப் பற்றி
ஓரளவே பேசும், ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் முறை, அமெரிக்க
ஆஸ்கார் ஜி. பிராக்ட் குறிப்பிடும் புதிய அணுகுமுறைகளைத்
தாண்டி, செயல்பூர்வமாகச் செய்து வரும் சிவாஜியின்
நடிப்பை ஒரு புகைப்பட நிலையில் நிறுத்துவதே நான்
கூறப் போகும் 'சிவாஜி இலக்கணம்'. இன்னும் சொல்லப்
போனால், சிவாஜியின் நடிப்பு என்பது 'applied
acting' என்று சொல்லலாம். இதுகாறும் இவர்கள்,
"கைவழி நயனஞ் சேர்தல்
கண்வழி மனம்
மனவழியே பாவம்
பாவவழி வசம் நிற்றல்"
என்று நம் நாட்டு நந்தி தேவர்
கூறிய ஆடல் இலக்கணம் உட்பட அனைத்து ஏட்டளவு இலக்கணங்களுக்கும்
வடிவமாக நிற்பவர் சிவாஜி கணேசன் என்ற தமிழர்.
"நடிகனின் அங்க அசைவுகள்
உணர்ச்சியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும்"
- என்று தான் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி கூறுகிறார். சிவாஜி
கணேசன் அதற்கும் ஒரு படி மேலே சென்று எந்த நிலையில்
(mood) எப்படி நிற்க வேண்டும், எப்படித் திரும்பிப்
பார்க்க வேண்டும், எந்த அளவுக்கு கைகளை உபயோகிக்க
வேண்டும் என்ற செய்திகளைக் கொண்ட இயங்கும் பயிற்சி
ஏடு (Moving System). அவ்வாறு எந்தக் கோணத்தில்
நின்று, எத்தனை தாழ்வாக அல்லது எத்தனை உயரத்தில்
கரங்களைத் தாழ்த்தி உயர்த்திப் பேசினால் அது காட்சிக்கு
அழகாகவும் இருக்கும் என்பதனை, அவர் நடித்த திரைப்படங்களின்
காட்சிகளிலிருந்து புகைப்படங்களின் துணையோடும் விளக்க
முயல்வதே 'சிவாஜி இலக்கணம்'.
கவிஞர்
நந்திவர்மன் ஜீவன் எழுதிய சிவாஜியின்
நடிப்பிலக்கணம் என்ற
நூலிலிருந்து...
நடிகர் திலகம் பற்றிய இந்நூலைப் பற்றியும், மற்ற நூல்களைப்
பற்றியும் விவரங்களை அறிய, இங்கே
சொடுக்குக