site logo
 
 

உத்தம புத்திரன் திரைப்படத்தின் வைர விழா சென்னைதியாகராய நகர் வாணி மகால் அரங்கத்தில் 01.04.2018 அன்று மாலை நடைபெற்றது. விழாவின் நிழற்படங்கள் இங்கே.

 
அரங்கின் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்த நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் நிழற்படம் தாங்கிய பேனருக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுக்கும் காட்சி.
உத்தம புத்திரன் படத்தில் பாடல்களைப் பாடிய திருமதி P. சுசீலா அவர்கள், தோஹா வங்கி நிர்வாக அதிகாரி திரு சீதாராமன் அவர்களிடமிருந்து நினைவுப் பரிசினைப் பெறுகிறார். உடன் அன்புச் சகோதரர் திரு ராம்குமார், நம் NTFANS அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா மற்றும் திருமதி சுதா மஹேந்திரா அவர்கள்.
யாரடி நீ மோகினி பாடல் காட்சியில் நடனமாடிய ரீட்டா அவர்கள் சுஹாசினி மணிரத்னம் அவர்களிடமிருந்து நினைவுப்பரிசைப் பெறும் காட்சி உடன் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்கள்.
 
உத்தம புத்திரன் தயாரிப்பு நிறுவனமான வீனஸ் பிக்சர்ஸ் பாகஸ்தரில் ஒருவரான திரு ரத்தினம் அவர்களின் சார்பாக திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்கள் நினைவுப் பரிசினைப் பெறும் காட்சி
நாட்டியப் பேரொளி பத்மினி சார்பாக ஷோபனா அவர்கள் திரு சீதாராமன் அவர்களிடமிருந்து நினைவுப் பரிசினைப் பெறும் காட்சி
திருமதி ராகினி சார்பாக அவரது புதல்வியார் மஹாலக்ஷ்மி ஜெயந்த் அவர்கள் நினைவுப் பரிசினைப் பெறும் காட்சி.
திரு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சார்பாக அவரது புதல்வர் திரு கே.எஸ்.ஜி. வெங்கடேஷ் அவர்கள் நினைவுப்பரிசினைப் பெறுகிறார்.
திரு ஓ.ஏ.கே. தேவர் சார்பாக அவரது புதல்வர் திரு ஓ.ஏ.கே. சுந்தர் அர்கள் நினைவுப்பரிசினைப் பெறுகிறார்.
காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடலுக்கு ஷோபனா அவர்களின் மாணவியர் நாட்டியமாடும் காட்சி.
இசையரசி சுசீலா அவர்கள் தம்முடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஷோபனா அவர்கள் தம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
விழாவின் ஒரு பகுதியாக உத்தமபுத்திரன் படப்பாடல்கள் இசைக்கப்பட்டன.
 
மேற்காணும் நிழற்படங்களுக்காக சம்பந்தப் பட்ட இணையதளங்களுக்கு நன்றி.
இன்னும் சில நிழற்படங்கள் கிடைக்கவில்லை. அவை கிடைத்தவுடன் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.
 
`