| மருத்துவ சாதனங்கள் விற்பனைத்துறை ஆலோசகராக பணி புரியும் திரு மருது மோகன் அவர்கள் பாரம்பரிய மிக்க விடுதலைப்போர் வீரரின் வம்சாவழி வந்தவர். அவருடைய தந்தையார் கே.வி.ராமச்சந்திரன் விடுதலைப் போராட்ட வீரராவார். மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப் பட்ட காலத்தில் மருதுமோகன் இல்லம் ஆங்கிலேய ஏகாதிபத்திய காவல் துறையால் சோதனை என்ற பெயரில் சூறையாடப் பட்டது. நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான் திரு மருதுமோகன் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்த்திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பராசக்தி-மனோகரா திரைப்படங்களைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையினைப் படித்தளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கலந்தாய்விலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மிகத் திறமையாக பதில் கொண்டு அவர்களை எதிர் கொண்டவர். அவருடைய ஆய்வேடு மலேசிய சஞ்சிகையான நயனம் இதழில் வெளியிடப் பட்டுள்ளது. அக்க்ட்டுரை தங்களின் பார்வைக்கு. |